Cine


கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பி பீதாம்ரா க்ருப் மீது அளித்த பாலியல் புகாரை நடிகை ஸ்வேதா மேனன் வாபஸ் பெற்றார். நடந்த சம்பவம் குறித்து பீதாம்ரா க்ருப் மன்னிப்பு கோரியதால், புகாரை திரும்பப் பெற்றதாக அவர் தெரிவித்துள்ளார்.
பீதாம்ரா க்ருப் மீது கொல்லம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே புகார் வாபஸ் பெறப்பட்டதால், அவர் மீதான சட்டப்பூர்வ நடவடிக்கை கைவிடப்படுகிறது.
கேரள மாநிலம் கொல்லத்தில் நடைபெற்ற படகுப்போட்டியின் தொடக்க விழாவில் ஸ்வேதா மேனன் கலந்துகொண்டார். விழாவில் பங்கேற்ற காங்கிரஸ் எம்பியான பீதாம்ரா க்ருப் பாலியல் ரீதியாக தன்னை தொட்டுத் தொல்லை கொடுத்தாக ஸ்வேதா குற்றம்சாட்டியிருந்தார்.
மேலும், இதுகுறித்து கேரள திரைப்பட சங்க நிர்வாகிகளை சந்தித்து ஸ்வேதா புகார் தெரிவித்தார். இதனையடுத்து பீதாம்ரா க்ருப் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்பவம் குறித்து ஸ்வேதா மேனனிடமும் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் தன் மீதான குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்று 73 வயதாகும் பீதாம்ரா க்ருப் தெரிவித்தார். அரசியல் உள்நோக்கத்தோடு பாலியல் புகார் எழுப்பப்படுவதாக பீதாம்ரா க்ருப் மறுத்த நிலையில், புகாரை நடிகை ஸ்வேதா வாபஸ் பெற்றுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Top