Cine


2015-ம் ஆண்டுக்கான ஆசிய மகளிர் கூடைப்பந்துப் போட்டியில் பங்கேற்க இந்திய அணி தகுதி பெற்றுள்ளது.
தாய்லாந்தின் பாங்காங் நகரில் நடைபெற்ற தகுதிச்சுற்று ஆட்டத்தில் இந்திய அணி, மலேசியாவை எதிர்கொண்டது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி 74-59 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.
முன்னதாக அங்கு நடைபெற்ற இந்த ஆண்டுக்கான லீக் ஆட்டங்களில் இந்திய அணி தொடர் தோல்விகளைச் சந்தித்தது. இதனால் அரையிறுதிக்கு முன்னேற முடியவில்லை.
சீனா, சீன தைபே, கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய அணிகளுடனான லீக் ஆட்டங்களில் தோல்வியைத் தழுவியது. எனினும், கஜகஸ்தான் அணியுடன் வெற்றி பெற்று, 2015-ம் ஆண்டுக்கான தகுதிச்சுற்று ஆட்டத்தில் பங்கேற்றது.

0 comments:

Post a Comment

 
Top