Cine

அமெரிக்காவில் மீண்டும் பரபரப்பு சம்பவம் வணிக வளாகத்தில் துப்பாக்கி சூடு நடத்தியவன் தற்கொலை:

மெரிக்காவில் தனி நபர்கள் துப்பாக்கியால் சுட்டு அட்டூழியங்களில் ஈடுபடுவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இதற்கிடையில் நியூஜெர்சி நகரின் வடக்குப்பகுதியில் அமைந்துள்ள பிரபல வணிக வளாகத்தில் ஒரு துப்பாக்கி சூடு சம்பவம் அரங்கேறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வணிக வளாகத்தில் தியேட்டர்கள், ஓட்டல்கள் மற்றும் கடைகள் இருப்பதால் எப்போதுமே பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழியும். நேற்று முன்தினம் இரவு கடைகளை மூடும் நேரத்தில் ஒரு நபர் உள்ளே நுழைந்தார். பிறகு அவர் திடீரென்று தனது துப்பாக்கியை எடுத்து பல முறை சுட்டார். இதனால் கடைகளில் நின்ற வாடிக்கையாளர்களும், ஊழியர்களும் அலறியடித்துக் கொண்டு சிதறி ஓடினார்கள். ஆனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று பொதுமக்களை வெளியேற்றினர்.
துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர் அங்கு தான் பதுங்கி இருப்பதாக போலீசார் கருதினர். எனவே ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு ஒவ்வொரு கடையாக சென்று தீவிர சோதனை நடத்தினார்கள். இதற்கிடையில் வணிக வளாக பின் பகுதியில் மர்ம நபர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்தான். அவனுடைய பெயர் ரிச்சர்டு ஹோப் (20) என்றும் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவன் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

0 comments:

Post a Comment

 
Top