மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலில் கடந்த செவ்வாய், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் பல இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு நடைபெற்றது. இதில் 3 பேர் பலியானார்கள். 8 பேர் காயம் அடைந்தனர்.
இந்நிலையில் மேலும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீசார் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். போலீசார் ரோட்டோரம் மோப்ப நாய்களுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ரோந்து போலீசார் கிழக்கு இம்பால் மற்றும் மேற்கு இம்பாலில் தீவிரமாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
சாலை மற்றும் மக்கள் கூடும் முக்கிய இடங்களில் சந்தேகத்திற்குரிய பொருட்கள் ஏதாவது கிடந்தால் பொதுமக்கள், போலீசாருக்கு உடனே தகவல் தெரிவிக்க வேண்டும் என இம்பால் போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.