Cine

விமான பயணத்திலும் போலி டிக்கெட்:


விமான பயணத்திலும் போலி டிக்கெட் அறிமுகமான ஒரு சம்பவம் வெனிசுலா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. அங்குள்ள காரகாஸ் நகரில் இருந்து கனடா நாட்டிற்கு விமானம் புறப்பட தயாரானது. அப்போது விமானத்தில் 5 பயணிகள் கூடுதலாக இருப்பது விமானிக்கு தெரியவந்தது. உடனே 5 பேரையும் சிப்பந்திகள் கீழே இறக்கி பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவ அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
அந்த 5 பயணிகளிடமும் விசாரணை நடத்தியதில் 4 பேர் ஈரான் நாட்டையும், ஒருவர் ஆப்கானிஸ்தானையும் சேர்ந்தவர் என்பதும், இவர்களிடம் கனடா செல்வதற்கான விசா இல்லாதது மற்றும் முறையற்ற பயண டிக்கெட் (போலி சீட்டு) இருப்பதும் தெரியவந்தது. பிறகு 5 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தினால் விமானம் 5 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

0 comments:

Post a Comment

 
Top