Cine


இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமருன் இளவரசர் சார்லஸ் ஆகியோர் புறக்கணிக்கக் வேண்டுமென லண்டனில் தமிழர்கள் அமைப்பு சார்பாக பிரமாண்டமான பேரணி நடைபெற்றது.

இந்தப் பேரணியில் நூற்றுக்கணக்கான ஐரோப்பிய வாழ் தமிழர்கள் பங்கேற்றனர். எம்பேங்மெண்ட் ரயில் நிலையத்தில் தொடங்கிய இந்தப் பேரணி இங்கிலாந்து பிரதமர் வசிக்கும் டவுனிங் தெரு வரை நடைபெற்றது. இலங்கையின் மனித உரிமை மீறல்களை கண்டித்து, அந்நாட்டில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டுமென பேரணியில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினர். மேலும் காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கயை நீக்க வேண்டுமென்றும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

0 comments:

Post a Comment

 
Top