Cine

தீபாவளி உற்சாக கொண்டாட்டம்:

 

தீப ஒளி திருநாளான நேற்று இந்திய முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.தீபாவளி பண்டிகை வடமாநிலங்களில் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. பஞ்சாப் மாநிலம் அமர்தசரஸில் உள்ள பொற்கோவில் தீபாவளியையொட்டி வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நள்ளிரவில் ஏராளமான சீக்கியர்கள் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.
அலகாபாத்தில் மைதானம் ஒன்றில் விளக்குகள் ஏற்றப்பட்டு தீபாவளி கொண்டாப்பட்டது.200-வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க உள்ள சச்சினை கௌரப்படுத்தும் விதமாக தீபங்கள் ஏற்றப்பட்டிருந்தன.
திரிபுராவில் தீபாவளி காளிபூஜையாக கொண்டாடப்பட்டது. ஏரளாமான பக்தர்கள் காளியை நீண்டவரிசையில் காத்திருந்திருந்து வழிபட்டனர். எல்லை பாதுப்பில் ஈடுப்பட்டுள்ள ராணுவ வீரர்கள் தீபாவளியை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்திய வங்கதேச எல்லையில் இருநாடு ராணுவவீரர்களும் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டர். பட்டாசுகளை வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் ராணுவ வீரர்கள் குடும்பத்தினருடன் தீபாவளியை கொண்டாடினர்
.

0 comments:

Post a Comment

 
Top