Cine

10,000பேர் பலி? பிலிப்பைன்சை சூறையாடியது புயல்:
பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய ஹையான் புயலுக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. புயல் தாக்கியபோது பெய்த கனமழை காரணமாக கட்டுக்கடங்காத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் பிலிப்பைன்சில் உள்ள தீவுகளில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மழையால் ஏராளமான மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின்விநியோகமும் தடைபட்டுள்ளது.
மீட்புப் பணிகளுக்கு ராணுவ ரீதியிலான உதவி அளிக்க தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. மணிக்கு 315 கி.மீ வேகத்தில் காற்று வீசியதால், புயல் கரையைக் கடந்த பகுதிகளில் 80 சதவீத வீடுகள் சேதமடைந்துவிட்டதாக பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். புயலுக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments:

Post a Comment

 
Top